Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Paarvai Kavithai in Tamil - பார்வை கவிதைகள்

பார்வை கவிதை வரிகள்

என்னவளின் பார்வை கவிதை

நீ அழகானவள் என்று என்னுள் தோன்ற வைத்தது உன் பார்வை!

வலையில் சிக்கிய மீனாய் துள்ளிய அவள் கருவிழி பார்வை! ஆனால் அந்த வலையில் ஏனோ நான்மாட்டிக் கொண்டேன்!

அவள் பார்வை

உன் வேல்விழி பார்வை, என் இதயத்தை துளைத்து, உள்ளே மறைத்து வைத்த உன் காதலை தேடுதோ!

மிகவும் ஆபத்தான ஆயுதம் எது என்றால், அழகான பெண்ணின் கண் பார்வையே!

குழந்தை பார்வை

குழந்தை போல் எல்லாருடைய இதயத்தை திருடிகொள்ளும் பார்வை உன்னுடையது!

விழியோரப் பார்வை

என் இதயத்தை செயல் இழக்கச் செய்யும் ஓர் உயிரியல் ஆயுதம், உன் விழியோர பார்வை!
என் இதயத்தை செயல் இழக்கச் செய்யும் ஓர் உயிரியல் ஆயுதம், உன் விழியோர பார்வை!

வெட்கப் பார்வை

விதைக்காமலே முளைக்கிறது, காதலும் சரி, அவள் பார்வையும் சரி!

இருவிழிப் பார்வை

இமைகள் உறங்கினாலும் இருதயம் ஏகுதடி... இருவிழிப் பார்வை போதுமுடி, இருளும் விடியுடி...

காதல் பார்வை

உன் ஒவ்வொரு பார்வையும் பதம் பார்க்கிறது, நம் காதல் எவ்வளவு ஆழமானது என்று!

எட்டி எட்டி பார்த்து விழி ஏகத்துக்கும் ஏங்குதடி! என்ன பார்வை பார்த்தாயோ, எண்ணம் தடம் மாறுதடி! என்ன நினைத்து படைத்தானொ, எனை கொள்ளவே வடித்தானொ?

ஓரக்கண் பார்வை

எத்தனையோ போதைப்பொருட்கள் இருந்தும், என்றும் எனக்கு பிடித்த ஒரே போதை உன் விழிப்பார்வை மட்டுமே!

என்னவளின் கண்கள் காண என்ன தவம் செய்தேனோ, என்னை கொல்லாமல் கொல்லும் அவள் ஓரவிழிப்பார்வைகள்!

ஓர விழிப்பார்வையால் எனை தூரமாக்கிப் போகாதே! தூரமாய் நீ போனாலும் எனை ஓரமாக்கிப் போகாதே! பாசமாய் பின் வருவேன் எனை பாரமாய் நினைக்காதே! பச்சைக் கிளியே எனை விட்டு பறந்து போக பார்க்காதே!

வெட்கப் பார்வை

அவள் மருண்ட விழி பார்வையில் சிக்குண்டு, அவள் கருவிழி அசைவில் கட்டுண்டு, அவளை களவாட துடிக்கும் கள்வனாய் நான்!

காந்தப் பார்வை கவிதைகள்

புவி ஈர்ப்பு விசையினைக் காட்டிலும், உந்தன் பார்வைக்கு ஈர்ப்பு விசை அதிகமடி...

நிர்க்கதியாய் நின்ற வானம் மேகங்கள் முழுவதுமாய் திருடிக்கொண்டது, இவள் கண்களின் காந்த பார்வை!

புரியாத உன் பார்வை

பார்வையால் என்னை பரித்தாய்! சிரிப்பால் என்னை சிதைத்தாய்! வார்த்தைகளால் என்னை வதைத்தாய்!

கொஞ்சும் விழிப் பார்வை

இருமனங்கள் உரவாட வார்த்தைகள் ஏதும் தேவையில்லை, பார்வைகள் பேசும் மௌன மொழியே போதும் என்பதை உணர்ந்தேன், உன் விழி காதல் மொழி பேசுகையில்!

மயக்க விழிப் பார்வை

மயங்கித்தான் போகிறது, உன் மயக்கும் விழிப்பார்வையிலே! மதி கெட்டு பெண் உன்னாலே, இந்த மானம்கெட்ட மனது!

ஒற்றை பார்வை கவிதை

என்னை மின்னல் போல வந்து தாக்கியது, உன் முதல் பார்வை! அந்த மின்னல் பார்வையால், பறித்துக் கொண்டாய் என் இதயத்தையும்!

இனியவனோ தன் ஒற்றை பார்வையில் என் மனதினை கொள்ளை கொள்ள, நானோ விழியீர்ப்பு விசையில் மீள இயலாதவளாக வியந்தேன்!

அவள் பார்த்த ஒற்றைப் பார்வையில், மயங்கி கிறங்கி போனேன் இன்றுவரை!

கவிதை பார்வை

அவள் வானம் பார்க்க வெண்ணிலவும் பொறாமை கொள்ளும்!

கூர் குறையாது ஈட்டியை போல உந்தன் பார்வை என்னை கொல்லுதடி!

கவிதை எழுத உன் பார்வை மட்டும் போதும் எனக்கு

கவிஞனாய் உன் கண்கள், கவிதையாய் உன் பார்வை, ஒரு ரசிகனாய் உன்னை நான் ரசிப்பேன்!

என்னவனின் பார்வை

வேலையின் நடுவே, நிமிர்ந்து அவன் வீசும் பார்வையில், என் பெண்மை கட்டவிழிந்து விடுகிறது!
தொட்டால் பூ மலரும் என்கிறார்கள். தொட வேண்டிய அவசியம் கூட இல்லை! அன்பே, நீ பார்த்தாலே போதும், நான் மலர்ந்து விடுகிறேன்!

ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவம் உணர்ந்தேன், உந்தன் பார்வையிலே!

வசீகரப் பார்வை

எப்படி அலங்கரித்து கொண்டாலும், உன் வசீகர பார்வையின் முன், அத்தனையும் அலங்கோலம் தான்!

நீ அழகானவன் என்று என்னுள் தோன்ற வைத்தது உன் பார்வை

ஆண் பார்வை கவிதை

படபடவென்று பேசிய உதடுகள் வார்தையின்றி தவித்தன, அவன் பார்த்த பார்வையில்!

பார்வை மொழிகள்

உன் பார்வையின் மொழி புரியாததால், என் காதல் சொல்ல கடிகார நேரம் போதவில்லையடி!

பாவை அவள் பார்வை மொழிகளுக்கு, அலைவரிசையாக மாறினேன், பார்த்த முதல் நாளே!

அவள்பார்வையின் அர்த்தம் தெரியவில்லை, பிரம்மன் படைப்பின் அர்த்தம் விளங்கவில்லை, இதுதெரிந்தும் ஏனோ அவள் விடையாகி, எனக்கு வினாவாகிறாளோ?

பனி போன்ற பார்வை

பனி போன்ற உன் பார்வையில், என்னை உரைய வைத்தாய்!



Close