Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Valkai Thathuvam in Tamil

Vazhkai Thathuvam in Tamil - தமிழ் தத்துவங்கள்


Vazhkai Thathuvam

அடுத்தவன் ஆயிரம் சொல்லுவான். அது எதையும் கேக்காத! உன் மனசுல எது சரின்னு படுதோ, அத செஞ்சிட்டு போய்ட்டே இரு! அட்வைஸ் பண்ற எவனும் நம்ம Life-அ வாழ போரது இல்ல.

தவறான வழியில் வரும் பணம், தவறாமல் துன்பத்தைத் தரும்!
-
காலம் எந்தக் காயத்தையும் ஆற்றுவது இல்லை! அது நம் மனதை பக்குவபடுத்துகிறது அவ்வளவு தான்!
-
செய்த தவறுக்கு காரணம் சொல்லி சமாளிக்க முயலாமல், அடுத்தமுறை செய்த தவறிலிருந்து தன்னை மாற்றிக் கொள்வதே நல்லது!
-
காலம் என்றுமே நம் கேள்விக்கு விடைக் கொடுப்பதில்லை! பதில் கிடைக்கும் என்று நம்மை நாமே பழக்கிக் கொள்கிறோம்!
-

சிந்திக்க தெரிந்தவர்களுக்கே சிந்தனை வளர்கிறது! சிந்தித்து வாழ், சிந்தனையோடு வாழ்!


Tamil Thathuvangal

வாழ்க்கையில் ஏற்படும் இருளை, புன்னகையுடன் கடந்து செல். வாழ்க்கை பிரகாசிக்கும்!
-
உங்கள் சிந்தனையில் சிறிது மாற்றம் செய்தால், வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் அடையலாம்! எண்ணம் போல் வாழ்க்கை!
-
ஒருவரையும் குறைத்து மதிப்பிடவோ காயப்படுத்தவோ வேண்டாம்! இன்று வலிமையும், அதிகாரமும் உள்ளவனாக இருக்கலாம்! ஆனால் காலம் அதிக வலிமையுடையது.
-
இந்த நொடி மகிழ்ச்சியாக இருப்போம்! இந்த நொடி தான் வாழ்க்கை! மகிழ்ச்சி என்ற சாவியை தேடி அலைய வேண்டாம்! அது நம்மிடம் தான் உள்ளது!
-
ரசனை என்பது அவரவர் விருப்பு வெறுப்பைப் பொறுத்தது... மற்றவருக்கு பிடித்தது நமக்கும் பிடித்ததாக இருக்க வேண்டும் என்பது அவசியமற்றது! நமக்கு பிடித்ததை பிறர் மேல் திணிப்பது, தேவையற்றது!


தத்துவம் Quotes in Tamil

சிறு சிறு நீரோட்டங்கள் தான் நதியை உருவாக்குகிறது, சிறு சிறு போராட்டங்கள் தான் நம் வாழ்க்கை உருவாக்குகிறது!
-
நாம் சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல, நம்மையே நாம் செதுக்கி கொண்டு வாழ்வதே வாழ்க்கை!
-
வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டும் என்றால், உன்னை நேசி! வாழ்க்கையே சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால், உன்னை விரும்பும் நபரை நேசி!
-
சோம்பல் உன்னை ஏமாற்றாமல் காத்துக்கொள்! ஏனெனில் அதற்கு இன்று ஒருநாள் கொடுத்தால், அது அடுத்த நாளையும் திருடிக்கொள்ளும்.


Thathuvam Quotes in Tamil

எதிர்ப்பார்த்து ஏமாறுவதை விட, எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு வாழ்வது எவ்வளவோ மேல்! வலி இல்லாத வாழ்க்கைக்கு அதுவே வழி!
-
வாழ்வில் உயர்ந்தவர்கள் அனைவரும் நேர்மறை எண்ணம் கொண்டவர்களே!
-
கசக்கும் உண்மையை விட, இனிக்கும் பொய்களே விரும்பப்படுகின்றன!
-
ஜீவன் இருக்கும் மட்டும், வாழ்க்கை நமக்கு மட்டும்!
-

வாழ்க்கையில் கஷ்டங்கள் அதிகமாக வரவில்லை என்றால், பல விஷயங்கள் கடைசி வரை தெரியாமல் போய்விடும்...


Life Thathuvam in Tamil

நாம வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய நல்ல மாற்றங்கள் எல்லாம், நாம் அதிகம் நேசித்த ஒன்றை இழந்த பின்பே நடந்திருக்கும்!
-
வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்று இரண்டுமே கலந்து தான் வருகிறது! அது போல நாமும் இன்பத்திலும், துன்பத்திலும் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
-
எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் இனிமையும், செயலில் நேர்மையும் கொண்டதே, எளிமையான வாழ்க்கை.
-
கடந்த காலத்தில் வாழாதீர்கள்! அதிலிருந்து கற்றுக் கொள்ள பாருங்கள்.
-
இன்று நீங்கள் செய்யும் ஒரு சிறந்த செயலுக்கு, உங்கள் எதிர்காலம் உங்களுக்கு நன்றி சொல்லும்.
-

போதிக்கும் போது புரியாத பல விஷயங்கள், பாதிக்கும் போது புரியும்!

Valkai Thathuvam Tamil

எங்கு காதல் இருக்கிறதோ, அங்கு வாழ்க்கை இருக்கிறது.
-
இன்று நீங்கள் அனுபவிக்கும் வலி, நாளை உங்கள் பலமாக மாறும்!
-
ஒரு சிலர் அமைதிக் காப்பது நமக்கு ஆபத்து நேர்ந்திடிமோ என்பதினால் அல்ல! நம்மால் பிறருக்கு ஆபத்து நேர்ந்திடக் கூடாது என்பதால் தான்!
-
சிலரோடு ஒப்பிடும் போது, வெற்றியடைந்தது போலவும், சிலரோடு ஒப்பிடும் போது தோல்வியடைந்தது போலவும் இருக்கும்; உண்மையில் எவரோடும் ஒப்பிடாத போதே மகிழ்ச்சி நிலைக்கும்..!
-
நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது கண்டிப்பாக கிடைத்தே தீரும்!
-
கூறப்படவேண்டிய, நன்றியும் கேட்கப்படவேண்டிய மன்னிப்பும், தாமதிக்காமல் செய்ய வேண்டியவை!


Vazhkai தத்துவம் 

வாழ்க்கை என்பது பரீட்சை போல, வரும் துன்பங்களை எல்லாம் தேர்வெழுதி வெற்றி பெற்றால் போதும், வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
-
போராடி வாழ்வதற்கு வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல. அது பூ வனம், ரசித்து வாழ்வோம்.
-
வேண்டாம் என்று கூறினாலும், கற்று கொடுப்பதை நிறுத்துவதில்லை வாழ்க்கை, வாழ்வது எப்படி என்று...
-
அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை! முடிந்தவரை யாரையும் காயப்படுத்தாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள்...
-
சிறகு உடைந்த பறவை போல, சிறைக்குள் சிறைப்பட்டு போகிறது சிலரின் வாழ்க்கை!
-
வாழ்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை. ஆனால் வந்த எதுவும் ஒரு பாடம் கற்றுத்தராமல் போவதில்லை!


Thathuvam Kavithai

அடிக்க அடிக்க தான் இரும்பு உறுதியாகும்! அடி வாங்க வாங்க தான், உன் வாழ்க்கையும் வளமாகும்.
-
தனியாக நீந்தி கரை சேர கற்றுக்கொள்! யாரும் இறுதி வரை நம்மோடு பயணிக்கப் போவதில்லை!
-
தொலைந்து போன நாட்களை எண்ணி வருந்தினால் இருக்கின்ற மீதி நாட்களும் தொலைந்து போகும்!
-
உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது நீங்கள் இப்பொழுது எங்கிருக்கீறீர்களோ அங்கேயேகூட இருக்கலாம்!
-
உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே!


Thathuvam Lines Tamil

எதிர்ப்பாராத சில திருப்பங்களுக்கு முன், ஓர் புரியா இருட்டு நம்மை கடப்பது உண்டு.
-
பிற மனிதர்களோடு நீங்கள் உண்மையாக பழகாத வரையிலும், பிற மனிதர்கள் உங்களோடு உண்மையாக பழகாத வரையிலும், வாழ்க்கை அவ்வளவு அழகாக இருக்காது!
-
கிடைத்தது ஒரு நாள் தொலைந்து போகலாம்! பிடித்தது ஒரு நாள் வெறுத்தும் போகலாம்! நிரந்தரம் என்று ஏதும் இல்லை இந்த உலகில்!
-
பிறப்பறியாது பிறக்கின்றோம்! இறப்பறியாது இறக்கின்றோம்! நடுவில் வாழ தெரியாது, வாழ்கின்றோம்!
-
இதுவரை நடந்ததை யோசிப்பதை விட, இனி எப்படி நடக்க வேண்டும் என யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்!
-
அனைத்துக்கும் காரணம் தேடிக்கொண்டிருந்தால், வாழ்க்கையை ரசிக்க முடியாது!


Tamil தத்துவங்கள் Quotes

காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை!
-
இதுவரை நடந்ததை யோசிப்பதை விட, இனி எப்படி நடக்க வேண்டும் என யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்!
-
நம் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய நல்ல மாற்றங்கள் எல்லாம் - நாம் அதிகம் நேசித்த ஒன்றை இழந்த பிறகே நடந்திருக்கும்! ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும்!
-
தகுதியான நேரத்தை நோக்கி காத்திருக்காதீர்கள்! கிடைக்கும் நேரத்தை தகுதி ஆக்கிக்கொள்ளுங்கள்!
-
கிடைத்த வாழ்க்கையை ரசித்து வாழத் தெரிந்தால் அந்த வாழ்வுக்குப் பெயர் தான் அழகான வாழ்க்கை!
-
உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா? ஒரே தீர்வு யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்?
-
யார் அருகில் இருக்கும் போது மகிழ்ச்சியை உணர்கிறோமோ, அவர்களோடு தான் மகிழ்சியாக வாழ முடியும்!


வாழ்க்கை தத்துவம் Quotes

தெளிந்த நீரோடை போல இருக்கும் இதயத்தில் கவலை எனும் கல்லை எறிந்து களங்கப்படுத்த வேண்டாம்!
-
எதிர்பார்ப்பு இல்லாமல் மற்றவர்களை பார்த்து புன்னகை செய்யுங்கள். உங்களை விட அழகானவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை!
-
உரிமை இல்லாத உறவும், உண்மையில்லாத அன்பும், நேர்மை இல்லாத நட்பும், நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரம் இல்லை!
-
வாழ்க்கை என்பது புத்தகம் போல. அதில் முதல் பக்கம் கருவறை. கடைசி பக்கம் கல்லறை. இடையில் உள்ள பக்கங்களை கண்ணீரால் வாசிக்காதே! புன்னகையால் வாசி.
-
கடந்து செல்ல கற்றுக்கொள்! உன்னை குறை கூறுபவர்கள் யாவரும் உத்தமர் இல்லை என்பதை நினைவில் வைத்து!
-
நம் அனைவருக்கும் இலக்கு ஒன்று தான்! அதற்கு செல்லும் பாதைகள் தான் வெவ்வேறாக உள்ளது!


Thathuvam SMS Tamil

எந்த நேரத்தில் என்னென்ன திருப்பங்கள் நடக்கும் என்று எவராலும் யூகிக்க முடியாத உலகின் மிகப் பெரிய மர்ம நாவல் மனிதனின் மனம்!
-
நம்ம வாழ்க்கையில நடக்குற மாற்றங்கள் நமக்கு நிறைய அனுபவங்களை கற்றுத்தரும்
-
வாழ்க்கை என்ற ஓட்டப்பந்தயத்தில், காலத்தை வென்றவர்கள் சரித்திரத்தில் இல்லை! மாறாக காலத்தை உங்கள் நண்பனாக தேர்ந்தெடுங்கள்! காலம் அதிஷ்டத்தை உங்களுக்கு விட்டு கொடுக்கும்!
-
யாரை எங்கே நிறுத்த வேண்டும் என்பதை விட, நாம் எங்கே நிற்க வேண்டும் என்று உணர்ந்து கொள்வதே சிறப்பு!
-
கோபப்படுபவர்களிடம் பழகிப் பாருங்கள்! நேர்மையும், உண்மையும், அன்பும் எப்படி என்பதை கற்றுக் கொள்ளலாம்!
-
வைத்துக்கொள்ள எதுவுமே இல்லையென்றால், இழப்பதற்கும் ஒன்றுமில்லை!

Life தத்துவம் Quotes

தொலைந்து போன நாட்களை எண்ணி வருந்தினால் இருக்கின்ற மீதி நாட்களும் தொலைந்து போகும்!
-
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது, தடைகளற்ற வாழ்க்கை அல்ல! தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை..!
-
அறிவும் திறமையும் எல்லோரிடமும் உள்ளது! ஆனால் அதை வழி நடத்தும் விதத்தில் தான் வெற்றியும் தோல்வியும் உள்ளது... அறிவு ஒரு கூர்மையான கத்தி! அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து தான் நன்மையும் தீமையும் அமையும்!
-
சொல்லில் இனிமை இருந்தால், வேப்ப எண்ணையும் விற்றுவிடலாம். சொல்லில் கடுமை இருந்தால் தேன் கூட விற்க முடியாது!
-
மத்தவங்களோடு ஒப்பிட்டும், அடுத்தவங்கிட்ட எதிர்பார்த்தும் வாழாத வரை வாழ்க்கை நம் வசம் தான்!
-
சில கனவுகளை நிஜமாக எண்ணி மகிழ்வதும், நிஜங்களைக் கனவாக எண்ணி மறப்பதும் தான் வாழ்க்கை!
-
நல்லதைக் கூட்டு, கெட்டதைக் கழி, அன்பைப் பெருக்கு! இவ்வாறு வாழ்க்கையை வகுத்துக் கொள்!

Valkai Thathuvam Images

வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்றால், பல துன்பங்களையும், அவமானங்களையும் சந்தித்தே ஆக வேண்டும்!
-
வாழ்க்கையில் முன்னேற, மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதைவிட, தற்போது என்ன இருக்கிறதோ அதை வைத்து முன்னேறும் வழியைக் காண வேண்டும்!
-
பிடித்தை கூட வெறுத்து ஓதுக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறது வாழ்க்கை! சில தித்திப்புக்கு பின் பல திகட்டல்கள்!
-
இறுதி பக்கம் இதுதான் என்று கூற முடியாத கதை புத்தகம் தான் நம் வாழ்க்கை.
-
எதுவாயினும் கவனத்துடன், தேவைக்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் இன்றைய தேவை, நாளைக்கு தேவையற்றதாக மாறி விடுகிறது.
-
ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைப்பதைவிட, உழைக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பது, அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியைத் தேடித் தரும்.
-
பிரச்சனை இல்லாத வாழ்க்கை தான் வேண்டும் என்றால், கல்லறைக்குச் சென்ற பின்பு தான் கிடைக்கும்!


Thathuvam Kavithai in Tamil

வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்துவிட்டால், ஆணவம் என்பது காணாமல் போய்விடும்!
-
அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை! முடிந்தவரை யாரையும் காயப்படுத்தாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள்...
-
காலத்தின் மதிப்பு தெரிந்தால், வாழ்வின் மதிப்பு தெரிந்துவிடும்!
-
உன்னை விட்டு விலகி செல்பவை எதுவாக இருந்தாலும், சந்தோசமாக வழி அனுப்பி வை! நீ இழந்ததை விட, சிறப்பாக தர வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது!
-
வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் நாம் எங்கு நிற்கிறோம் என்பதல்ல! எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே!
-
வாழ்க்கை தரும் கஷ்டங்களைக் கண்டு பயந்து ஓடுபவன், அது தரும் சிறு இன்பத்தைக் கூட அனுபவிக்க தகுதி அற்றவன்!

Vazhkai Kavithai Thathuvangal

அழகிய காட்சியைத் தேடாதீர்கள்..! காணும் காட்சியை அழகாக்குங்கள்! வாழ்க்கை அழகாகும்...
-
விழுந்து விடுவேன் என்ற பயத்துடன் ஓடாமல் விழுந்தாலும் எழுந்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் ஓடுங்கள். வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது.
-
எல்லா மூங்கிலும் புல்லாங்குழல் ஆவதில்லை! சிலருக்கு படகாகவும், சீலருக்கு ஏணியாகவும், சீலருக்கு வீடாகவும் மாறுகின்றன! அதுப் போலத்தான் வாழ்க்கையும்!
-
ஒரு மனிதனை மனிதனாக ஆக்குவது உதவிகளும் வசதிகளும் அல்ல! அவனுக்கு ஏற்படும் இடையூறுகளும் துன்பங்களுமே ஆகும்! சிந்தித்து செயலாற்றுங்கள்! நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும்!
-
கஷ்டங்கள் கவலைகள் உனக்கு மட்டும் தான் என்று புலம்பாதே! இங்கு சந்தோஷத்தை மட்டும் அனுபவிக்கும் மனிதர் எவருமில்லை!
Thathuvam Kavithaigal

Close