Jeyendra Swami Ponmoligal in Tamil - ஜெயேந்திர சுவாமி பொன்மொழிகள்
ஜெயேந்திரர் சுவாமிகள் பொன் மொழிகள்!
1. உலகம் நலம் பெற வேண்டும் என தினமும் வழிபாடு நடத்துங்கள்.
2. தைரியமே உற்ற துணை. எதையும் சாதிக்கும் வலிமை இதற்கு உண்டு.
3. உலக விஷயங்களில் விருப்பம் இருக்கும் வரை துன்பம் தொடர்ந்திடும்.
4. யாருக்கும் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.
5. நல்லவர்கனின் மனம் நோகும் விதத்தில் நடக்கக் கூடாது.
6. தர்மத்தைக் காப்பதற்காக பொய் சொன்னாலும் குற்றமாகாது.
7. சுயநலம் கொண்டவன் எதைச் செய்தாலும் அது பாவம் தான்.
8. ஆபத்து நேரத்தில் கை கொடுத்து, இடித்துச் சொல்லி திருத்துபவனே நல்ல நண்பன்.
9. கடவுள் மீது பக்தி செலுத்தவே மனிதர்களாக பூமியில் பிறந்திருக்கிறோம்.
10. நம் பிறப்புக்கு காரணமான பெற்றோரே நம் முதல் தெய்வங்கள்.
Post a Comment