Yematram Quotes in Tamil – ஏமாற்றம் கவிதை
Quotes on Yematram in Tamil
எவ்வளவு முறை காயப்பட்டாலும், எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவதை ஏற்று கொள்ளவே முடியாது!
ஏமாற்றி பிழைப்பது புத்திசாலித்தனம் ஆகிவிட்டதால், நேர்மையாக வாழ்பவன் பிழைக்கத் தெரியாதவன் ஆகிவிட்டான்
Yematram Quotes in Tamil
அன்பால் ஏமாந்தவர்கள் ஒருபோதும் அழிந்ததும் இல்லை; அன்பை வைத்து ஏமாற்றியவர்கள் இறுதிவரை நன்றாக வாழ்ந்ததும் இல்லை.!
இன்று என்னுடன் வானமும் அழுகிறது. என் கண்ணீர் துடைக்க இனி நீ வரப் போவதில்லை என்றுணர்ந்து!
நீ சென்ற பாதை யாவும் மனம் தேடுகிறது! நீ திரும்பி வர மாட்டாயா
என!
Tamil Yematram Quotes
எவ்வளவுதான் நேசிக்க பல காரணங்கள் ஏற்படுத்தினாலும், சில சமயங்களில் நிதானம் தவறிய கோப வார்த்தைகள், மிகுந்த வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறது வாழ்கையில்!
நாம் ஏமாளியாக இருப்பது நமக்கு அவமானம் இல்லை! நாம் ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாமல் இருப்பதே நமக்கு பெருமை!
Yematram Kavithai in Tamil
ஏமாற்றம் என்பது வேறு ஒன்றுமில்லை, இனி அடுத்தவரிடம் எச்சரிக்கையாய் பழக ஓர் அலாரம்!
“ஏமாற்றியவர்களுக்கு நன்றி” அவர்கள் ஏமாற்றத்தை சொல்லி தரவில்லை! இனி ஏமாறாமல் இருக்க அனுபவத்தை தந்து இருக்கிறார்கள்.
யாவுமாய்… எப்போதும் ஆறுதலாக இருந்த ஒருவர்… இனி நம்மோடு இல்லை என்பதை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது!
கத்தியால் குத்தினால் கூட ஒரு நிமிடம் தான் வலி! ஆனால் அன்பை காட்டி ஏமாற்றினால் ஒவ்வொரு நிமிடமும் “வலி” தான்.
எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதே! ஏனென்றால் எதிர்பார்பதால் மட்டுமே நாம் ஏமாற்றத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகிறோம்.
💔Yematram Kavithai
எல்லா நேரத்திலும் நமக்கு புடிச்சவங்க ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. நமக்குதான் எவ்வளவு பட்டாலும் புரியறது இல்ல.
மறுக்க முடியாத மூன்று உண்மைகள்! அன்பாய் இருந்தால் ஏமாளி, உண்மையாக இருந்தால் முட்டாள், நடித்தால் மட்டுமே நல்லவன்!
நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும் உன்னை ஒரு நாள் தலை குனிய வைக்கும். அன்று புரியும், நீ ஏமாற்றியது அவர்களை அல்ல, உன்னையே என்று.
Betrayal Quotes in Tamil
நாம் இருவரும் ஒன்றாகத்தான் சொன்னோம், நான் உன்னை காதலிக்கிறேன் என்று! ஆனால் வித்தியாசம் நான் பொய் சொல்லவில்லை!
இன்று நீ எனக்கு செய்த துரோகத்தின் வலி, நாளை நீ நம்பிய ஒருவர், உன்னை ஏமாற்றும் போது அதன் வலி உனக்கு புரியும்!
ஏமாற்றம் வாழ்க்கை சோக கவிதைகள்
நீ வருவாய் என்று காத்திருந்த எனக்கு, நீ தந்த பரிசு ஏமாற்றமே!
உங்களை ஏமாற்றியவர்களிடம் ஒன்றை மட்டும் சொல்லி விலகுங்கள்! இன்று எனக்கு, நாளை உனக்கு!
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் உடன் பிறப்புகள்! ஒன்றை தொடர்ந்தே இன்னொன்று பயணிக்கும்!
ஏமாற்றங்களை நேசிக்கிறேன்… அது மட்டுமே என்னை ஏமாற்றாமல் தினம் தினம் ஏமாற்றுகிறது…
ஏமாறுகிறேன் என நினைத்து ஏமாற்ற நினைக்காதே! ஏமாற்றத்தின் வலியை உணர, நீயும் ஓர்நாள் ஏமாற்றப்படுவாய் என்பதை மறவாதே!
உண்மை காதலை தேடுகிறேன், வானில் பறக்கும் பறவைகளின் கால் தடங்களை தேடுவது போல!
சிலரது வேடங்கள் கலைந்த பின், நாடகம் முடிந்துவிடுகிறது, ஏமாற்றத்துடன்!
ஒவ்வொரு உறவுகளாலும் ஏமாற்றப்பட்டு வருகிறேன். இன்று வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை! என்னிடத்தில் அவரவர் தேவை நிறைவடைந்ததும் நழுவி விடுகிறார்கள்!
ஒருவர் மேல் அதிகம் அன்பு வைத்து விடாதே! கடைசியில், உனக்கு ஏமாற்றமே மிஞ்சும்!
ஏமாற்றமே வாழ்க்கை என வாழ்ந்தவன்! எப்போது விடிவு கிடைக்கும் என்று தெரியாமல் ஏமாறுகிறேன்!
தனிமை! ஏமாற்ற முடியாத உலகத்தில் ஆறுதல் கூறவும் ஆள் இல்லை!
நேரமில்லாத நேரத்திலும், உன்னுடன் பேசினேன்! நேரம் போவதற்காக பேசுகிறாய் என்று கொஞ்சம் கூட தெரியாமல்!
அன்பு வைப்பவர்களுக்கு கிடைக்கும் ஒரே பரிசு, ஏமாற்றம்!
எதிர்பார்த்து ஏமாறாத்தீர்கள்! ஏமாந்த பின், எதிர்பார்காதீர்கள்! எதுவானாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்! எதார்த்தமாய் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்!
நேசிக்கும் இதயத்தை எவ்வளவு காயப்படுத்தினாலும், அது நேசிப்பதை நிறுத்தாது. ஆனால் அந்த இதயத்தை ஏமாற்றினால், ஏமாந்த இதயம் மறுபடியும் யாரையும் நேசிக்காது!
அழகான வரிகள்…
http://www.tamilantech.com