Motivational Vivekananda Quotes in Tamil
எதைச் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். நம்மால் எதையும் செய்ய முடியும் என்று உறுதி கொள்ளுங்கள்.
எழுந்திருங்கள், விழித்திருங்கள். இனியும் உறங்காதீர்கள்!
Vivekananda Ponmozhigal Tamil
உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்! செல்வம் வேண்டுமானால் அதற்காகப் பாடுபடுங்கள்! அது நிச்சயம் உங்களை வந்து சேரும்!
நல்லெதிர்பார்ப்பு மனப்பான்மையையும், எல்லாவற்றிலும் நல்லதையே பார்க்கும் பாங்கையும் நாம் வளர்க்க வேண்டும். நமது மனத்திலும் உடம்பிலும் உள்ள குறைபாடுகளை நினைத்து, நாம் உட்கார்ந்து அழு வதில் எந்த லாபமும் இல்லை. எதிர் மறையான சூழ்நிலைகளை அடக்குகின்ற வீர முயற்சியே நம் ஆன்மாவை மேலே கொண்டு செல்லும்!
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்கதே!
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி!
உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்!
எல்லோரிடமும் அன்பை கொடுத்து ஏமாந்துவிடாதே! யாரிடமும் அன்பை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிடாதே!
பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும்!
அறிவு வரும்போது மனிதன் முதிர்ச்சி அடைகிறான். அவனிடம் ஒழுக்கம் நிலவுகிறது!
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்! உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
வெற்றியை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது! தோல்வியை சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது!
உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
புன்னகையின் வழியாகவும், அழுகையின் வழியாகவும் நாம் பல பாடங்களைக் கற்றுக்கொண்டே இருக்கிறோம். அனுபவம் ஒன்றுதான் மிகச்சிறந்த ஆசிரியர்!
பின்னோக்கிப் பார்க்காதே எப்போதும் முன்னோக்கி நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதையே பார் முன்னேறுவது உறுதி!
அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு!
வெறும் புத்தகங்களைப் படிப்பதால் மனிதன் வறட்சி அடைகிறான் படித்தவன் யார்? துளியளவாவது அன்பை உணர்பவனே படித்தவன் கடவுளே அன்பு. அன்பே கடவுள் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்!
பூக்களாக இருக்காதே உதிர்ந்துவிடுவாய்! செடிகளாக இரு அப்போது தான் பூத்து கொண்டே இருப்பாய்!
இதயம் சொல்வதை செய் வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு!
கீழ்ப்படிய கற்றுக்கொள்ளுங்கள் கட்டளையிடும் பதவி தானாக வந்து சேரும்!
பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும் அவை; ஏளனம்,எதிர்ப்பு, அங்கிகாரம் ஆகியவை!
ஆயிரம் முறை தோற்றாலும் லட்சியத்தை கை விடாதீர்கள்.
தன்னைத்தானே நம்பாமல் சந்தேகிப்பது வீழ்ச்சிக்கு முதல் காரணம்.
கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடுதலையும் அறிவான்.
ஆற்றல்களுக்கு அடிப்படையாக இருப்பது ஒழுக்கமே!
ஏல்ல உயிர்களையும் நேசி! யார்மீதும் பொறாமைப்படாதே! பிறரது குற்றங்களைக் காணாதே!
உண்மையான துணிவோடு துவக்கப்படும் நல்ல காரியங்களுக்கு ஏற்படும் எதிர்ப்புகள், அதை ஆரம்பிப்பவர்களின் ஆற்றலைத்தான் அதிகமாக்கும். தடைகளையோ எதிர்ப்புகளையோ சந்திக்காத காரியங்கள், மனிதர்களை மரணத்தின் பாதைக்கே அழைத்துச் செல்லும்.
பணமோ, பெயர்புகழோ, கல்வியறிவோ எதையும் சாதித்து விடாது: குணநலன் ஒன்றுதான் கடினச் சுவர்களையெல்லாம் பிளந்துகொண்டு போகவல்லது. இதை நினைவில் கொள்ளுங்கள்.
எதையும் தேடிச் செல்லாதே, விலக்கவும் செய்யாதே! வருவதை அப்படியே ஏற்றுக் கொள். எதனாலும் பாதிக்கப்படாமல் இருப்பதே சுதந்திரம். பொறுத்துக் கொள்வது மட்டும் போதாது, பற்றற்று இருப்பது அவசியம்.
- Vivekananda Motivational Quotes Tamil
- Swami Vivekananda Ponmozhigal
- Vivekananda Slogan in Tamil
- Vivekananda Quotes in Tamil Text
- Vivekananda Quotes in Tamil Wallpaper
- Vivekananda Quotes in Tamil about Education
- Vivekananda Best Quotes in Tamil
- Vivekananda Lines in Tamil
hi bro unga website super irukku enna theme use pandreenga