Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

காதல் சண்டை கவிதைகள் - Love Fight Quotes in Tamil

கணவன் மனைவி சண்டை கவிதைகள்

Post Related To,

▶️ Love Fight Quotes in Tamil
▶️ Husband Wife  Fight Quotes in Tamil
▶️ செல்லச் சண்டை கவிதைகள்
▶️ Lovers Fight Quotes in Tamil
▶️ காதல் சண்டைகள்

செல்ல சண்டைக்குப் பிறகு இன்னும் என் அன்புக்குரியவள் ஆகிறாளே! இன்னும் என்னிடம் நெருங்கினாளே! பாசங்கள் அதிகரிக்க இடைவெளி குறைந்தன, சண்டைகள் கூட இனிமையானதே காதலில்!

கோபப்படுவது நீயாக இருக்கும் போது, உன்னிடம் தோற்பது எனக்கு சுகமே!

எத்தனை சண்டையிட்டாலும் ஒரு நொடியில் சமாதானமாகிறேன்! என்னவனே, நெற்றியில் உன் இதழ் பதித்து, என் தலையின் கூந்தல் வருடி, அரவணைக்கும் அந்த நொடியில்!

ஓங்கப்பட்ட கை இறக்கப்பட்டால், அந்த உறவின் மீது உள்ள அன்பு கோடிக்கணக்கானது!

சண்டையை தொடங்குவது நீ, சண்டையை முடிக்க ஒவ்வொரு முறையும் உன்னை சமாதானம் செய்வது நான்!

அன்பின் மொழியில், கோபமும் காதலே!

கோபத்திலும் எட்டி நிற்காமல், கிட்டவந்து கட்டியணைத்துத் திட்டும் அவன், ஓர் விந்தை!

உன்னுடனான எனது சண்டைகளில், எந்தன் ஒட்டு மொத்த வேண்டுதல் நீ மட்டும் தானே!

கோபமாய் நான் ஓரம் நிற்கும் போது, உன் செல்ல கொஞ்சல் போதும் பெண்ணே, என் கோபமும் வெட்கமாகி போகிறது உன்முன்னே!

சின்னச்சின்ன ஊடல்கள், நம்மை பிரிவதற்கல்ல! நம் காதலை வளர்ப்பதற்கு!

தனியறையில் தணலாய் தகிக்கும் என்காதல் தீயை, முத்தமழையில் குளிர்காயச் செய்கிறான், ஊடலில் நம் காதல்!

அவன் இட்ட ஒற்றை முத்ததில், என் ஒட்டு மொத்த கோபமும் மழைத்துளியாய் சிதறியதே!

எம் இருவர் இடையிலான மோதலில் வாழ்வது, காதலாகட்டும்!

சில நேரங்களில் கோபம் கூட ரசிக்கும் பட்டியலில் முதலிடம் பிடித்து விடுகிறது, பிடித்தவர்கள் படும்போது!

நான் உன்னை கெஞ்சவும், நீ என்னை கொஞ்சவும் சண்டைகள் சரணடைகிறது!

இலக்கணமின்றி முத்தமிட்டு இசைக்கும் இலக்கியத்துக்கு, ஊடலெண்ணும் பெயரோ?

ஒவ்வொரு ஊடலின் பின் நீளும் மெளனங்களில் நான் ஈன்றெடுக்கிறேன், நம் காதல் நினைவுகளைக் குழந்தைகளாய்!


அதிக கோபம் கொண்டதும், அதை விட அதிகம் பாசம் கொண்டதும் உன்னிடம் மட்டுமே!

காதல் என்ற யுத்ததில் விரும்பி தோற்றேன்! தண்டனையாய், அவள் இதழ்சிறை பெற!


ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில் தான், காதலின் அத்தியாயமே தொடங்குகிறது!

புயல் மழைக்குப் பின் பரவிய குளிர்நிம்மதி ஊடல் முடிந்து, அவனின் இதழ் முத்தம்!


ஆயிரம் முறை சண்டையிட்டாலும், அடுத்த நிமிடத்திற்குள் தேடி வந்து பேசும் உறவுகள் கிடைத்தால், அனைவரும் பாக்கியசாலிகளே!

நம்மை பிடித்தவர்களிடம் சண்டை போடுவதும், ஒரு விதமான மகிழ்ச்சி தான்!
எப்போதும் பேசியவர்கள் பேசவில்லை என்றால் அவர்கள் மனம் உடைந்திருக்கிறது என்று அர்த்தம்!

நான் விடுக்கும் அழைப்பை ஏற்காமல், எனை தண்டிக்க என் அழைப்பை துண்டிக்கிறாய் நீ!

பிடித்தவர்கள் நமக்கு கொடுக்கும் பெரிய தண்டனையே பேசாமல் இருப்பது தான்!

எந்த உறவாக இருந்தாலும் சரி... எவ்வளவு கோபம் இருந்தாலும் சரி... மனம் விட்டு பேசுசுங்கள்.. மரண வலி கூட, பறந்து போகும்....

அவன் மீது இவள் காட்டிய பொய் கோபத்தை பார்த்து சிரித்தது விட்டில் பூச்சி என் வாழ்நாளில் பத்தில் ஒரு பங்கு கூட இவள் கோபம் இவன் மீது நிலைக்கவில்லை என்று...
காதலுக்கு அழகே சிறு சிறு சண்டைகளும் சண்டைக்குப் பின் காத்திருப்பதும் தான்!

எங்கே அன்பு அதிகம் இருக்கிறதோ, அங்கே சண்டைகள் அதிகம் வரும்! எங்கே சண்டை அதிகம் வருகிறதோ, அங்கே சமாதானமும் அதிகம் இருக்கும்! சண்டை இடுவது விலக அல்ல! விலகி விடுவோமோ என்ற பயத்தினால் தான்!
தவறுகள் எல்லாம் காதலின் நிலையை சரிசெய்து கொள்வதற்கே விளைக்கப்படுகிறது. ஒருபொழுதும் காதலை பிரிப்பதற்கு விதிக்கப்படுவதில்லை

Close